முன் விரோதத்தால் இளைஞர் கொலை.. ஓசூர் அருகே பரபரப்பு..!
Youth Murder Near Hosur
முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாபு. இவருக்கும் மற்றோரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று மோகன் பாபுவை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மோகன்பாபுவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த திலக் (20) மூர்த்தி (21), பவன் (22), ஹேம்நாத் (21), சுரேஷ(;22), ராகேஷ்(20) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.