நெல்லை || காவல் நிலையம் முன்பு வாலிபர் வெட்டிக் கொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில், கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ மகன் சந்தியாகு. கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தின் புறகாவல் நிலையம் முன்பு சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்மகும்பல், திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தியாகுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியாகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், சந்தியாகுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. 

இதன் காரணமாக சந்தியாகு வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது. இருப்பினும், போலீசார் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மர்மகும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலியில், புறக்காவல் நிலையம் முன்பூ வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder in front of police station tirunelveli


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->