இலவசமாக மதுபானம் கேட்ட இளைஞர்.. பார் ஊழியர்கள் துணிகரம்..!
Youth Killed Near Chennai Due to aking Free Wine
டாஸ்மார்க கடையில் இலவசமாக மதுகேட்டவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மதுபான பாரில் அதே பகுதியை சேர்ந்தவர் கோகுல் என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அவர் இலவசமாக மதுபானம் மற்றும் சைடிஸ் கேட்டு தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊழிய்கர்கள் கட்டையால் அவரை பலமாக தாக்கியுள்ளனர்.
இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோகுலின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் கோகுலை தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Killed Near Chennai Due to aking Free Wine