பாத யாத்திரைக்கு சென்ற இளைஞர் வெட்டி கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Youth killed in Vellankanni
பாதயாத்திரை சென்று கல்லூரி மாணவன் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அபிஷேக் சில நாட்களுக்கு முன்பு உறவினர்களுடன் சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை ஆக சென்றுள்ளார்.
அப்போது மரக்காணம் அருகே சென்று கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்தவர் அவர்களிடம் தப்பியோட முயற்சித்தார். அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருந்தார்
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அபிஷேக்கு கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
English Summary
Youth killed in Vellankanni