சாலையில் வெட்டி கொல்லப்பட்ட இளைஞர், காவல்துறையினர் விசாரணை., திருநெல்வேலி அருகே பதற்றம்..!
Youth Killed in thirunelveli
இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்தவர் பேச்சிராஜா. இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சம்பவதன்று அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Killed in thirunelveli