தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் மோதல்.! இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனமும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(20). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் உறவினரை தர்மபுரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது செங்கல்மேடு பகுதி அருகே சென்ற போது தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணாபுரம் போலீசார், உயிரிழந்த ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth killed in Bus twowheeler collision in dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->