வாட்டர் சர்விஸ் செய்தபோது திடிரென தாக்கிய மின்சாரம்... வாலிபருக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா (28). இவர் நெல்லை டவுனில் மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். இந்நிலையில் இசக்கிராஜா நேற்று மாலை மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த இசக்கி ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜா, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed by electrocution in tirunelveli


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->