தாயை பயமுறுத்த நினைத்த மகன்... கடைசியில் நேர்ந்த அவலம்...! - Seithipunal
Seithipunal


தாயை மிரட்டுவதற்காக பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சரவண விஷால் என்ற மகன் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்த அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் தாயை பயமுறுத்துவதற்காக அவர் கழுத்தை அறுத்து கொள்ள போவதாக வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் குளியல் அறைக்கு சென்ற அவர் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்ததுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth death in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->