நாய் குரைத்த ஆத்திரம் - வாலிபர் செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன்நாயக். இவர் மீது இளம்பெண் ஒருவர், நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரில், "நேற்று முன்தினம் சாலையில் சென்ற போது என் வீட்டு நாய் குரைத்ததற்காக சந்தன் நாயக்கும், அவரது தந்தையும் எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அதுமட்டுமல்லாமல், நாயக், என் ஆடைகளைக் களைந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது தந்தையும் என்னைப் பலாத்காரம் செய்ய முயன்றார். 

அத்துடன், இரும்புக்கம்பியால், என் நாயின் அந்தரங்க பகுதியை சந்தன் நாயக் சிதைத்து துண்டித்தார். ஆகவே, அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் புவனேஸ்வரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth cut dog private part in odisa


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->