தேனி அருகே இளைஞர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை
Youth committed suicide in theni
தேனி அருகே தாய் கண்டித்ததால் இளைஞர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி அருகில் உள்ள கப்பிபட்டி மேற்குகாலனியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி புஷ்பம். இவர்களது மகன் முத்தமிழன்(20). இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதன்பின்பு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்தழகன், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth committed suicide in theni