திருவாரூர்: இருசக்கர வாகனம் வாங்க பணம் தராததால் இளைஞர் தற்கொலை...!
youth commits suicide near Thiruvarur
இரு சக்கர வாகனம் வாங்க பெற்றோர் பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரின் இரண்டாவது மகன் விக்னேஸ்வரன் (23) வேலை தேடி வந்துள்ளார்.
இவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக அவரது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை அதற்கு மறுத்துவிட்டார். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அதனை கண்டு அதிர்ச்சியடந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth commits suicide near Thiruvarur