திருவாரூர் || காவல்நிலையம் முன் தீக்குளித்த இளைஞரால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


காவல்நிலையத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மானந்தாங்குடி பகுதியை சேர்ந்தவர் சுதாகர். அவருக்கு இதய பாதிப்பு இருந்தால் அவரின் மனைவியின் சகோதரரிடம் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 90 ஆயிரத்தை சுதாகர் திருப்பி தந்த நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்காக சுதாகரிடம் அவரது மச்சான் பிரசாத் தகராற்றில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இத் குறித்து சுதாகரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சுதாகர் பேரலளம் காவல்நிலையத்தில் முன் தீக்குளித்தார். அவரை மீட்ட காவக்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Attempted Suicide Front Of Police Station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->