6 பெண்களை திருமணம் செய்த கல்யாணராமன்.. சிக்கியது எப்படி..! - Seithipunal
Seithipunal


6 பெண்களை ஏமாற்றி திருமணாம் செய்த வாலிபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், என்.ஜீ.ஓ பி காலணி உதயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜிலாராணி.. இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர்  என்பவருடன் கடந்த 2020 ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக தந்த நகைகளை விற்றுள்ளார். இதனை தட்டிகேட்ட விஜிலாராணியை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை விஜிலாராணி அவர்  தந்தையிடம் கூறவே அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் வின்சென்ட் பாஸ்கர்  ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் , விஜிலாராணியை 6வதாக திருமணம் செய்ததும்  தெரியவந்தது.

இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு  தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிப்பதாக தெரிவித்தார்.

அவர்கள் அந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைப்பதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested six women married case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->