திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றியவர் கைது..! - Seithipunal
Seithipunal


மாற்று திறனாளி பெண்னை திருமண செய்து கொள்வதாக கூறி  ஏமாற்றிய இளைஞரை காவல்துறையினர் லைது செய்தனர்\

திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு சுமதி (35)  என்ற மகள் உள்ளார். மாற்று திறனாளியான இவர் அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த  விஜயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறவே அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து இரண்டு லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள கூறிய போது அவர் அதற்கு மறுத்துள்ளார். மேலும், உறவினர்கள் உதவியுடன் அவரை அடுத்து விரட்டியுள்ளார். இதனை அடுத்து சுமதி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->