14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியில் சேர்ந்தவர் கார்த்திக் (23). இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் இடைத்தரகர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், போடி வஞ்சியோடை தெரு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கார்த்திக் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அதிர்ச்சடைந்து இது குறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திகை கைது செய்தனர். பின்பு போலீசார் கார்த்திகை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for sexually harassing 14 year old girl in theni


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->