கள்ளக்குறிச்சி : 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! போக்சோவில் வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (23). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த தமிழ்ச்செல்வன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for raping 16 year old girl in kallakurichi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->