போதை காளான் விற்பனை செய்த வாலிபர் - கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, கொடைக்கானல் பகுதியில் கஞ்சா, போதை காளான் உள்ளிட்டவை தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சிஎஸ்ஐ சர்ச் சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா, போதை காளான் உள்ளிட்டவற்றை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்தனர். 

இருப்பினும், இந்த சம்பத்தில், தொடா்புடைய முக்கிய நபரான ஹெலன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், ஹெலன் பெங்களூருவில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, பெங்களூருவுக்கு விரைந்த போலீஸார், அங்கு மறைந்திருந்த ஹெலனை கைது செய்து கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததனர்.
 
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு கஞ்சா, போதை காளான் விற்பனையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for drugs sales in dindukal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->