நீரில் மூழ்கி இளைஞர் பலி., பிறந்தநாள் கொண்டாடத்தில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் கொண்டாடத்தின் போது நீரில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி. இவருக்கு ஆதித்யா ராம் என்ற மகன் இருகிறான். இவர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில்,நேற்று ஆதியின் நண்பர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்தநாள் கொண்டாட அமராவதி ஆற்றங்ககரைக்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் அனைவரும் ஆற்றில்ல் இறங்கி குளித்துள்ளனர்.

இதனை அடுத்து, ஆதி திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புதுறையினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.

2 மணி நேரம் கடும் தேடுதலுக்கு பின் அவரின் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man drowns and dies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->