திருவள்ளூர் || கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாமனேரி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆதிவராதபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் என்ற வாலிபர் கத்தியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested sexually harassed a 12 year old girl in tiruvallur


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->