திருவண்ணாமலையில் அதிர்ச்சி.! பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமாள் (30). இவர் உறவினரான முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது பெருமாள் அழைத்துச்சென்ற முதியவருக்கு புறநோயாளிகள் பிரிவில் பெண் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார்.

அப்பொழுது அங்கிருந்த பெருமாள் பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பெண் மருத்துவர் கூச்சலிடவே, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமாளை மடக்கிபிடித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண் மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பெருமாளை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man arrested for sexually harassing a female doctor in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->