கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்பு.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பட்டுர் பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். மருதுபாண்டியும் அவரது பெற்றோ தனியாருக்கு சொந்தமான தோப்பில் வேலை செய்து வருகின்றனர்.

அங்கு விளையாடி கொண்டிருந்த யாஷிகாஸ்ரீ  எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்துள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி கிணற்றில் விழுந்ததை கண்டறிந்தனர்.

உடனடியாக காவல்துறையினருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிறுமியை மீட்டனர். அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Girl drowns in to water


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->