இராமநாதபுரம் - ஆளுநரிடம் பாராட்டுப்பெற்ற பிரபல யோகா மாஸ்டர் விபத்தில் பலி.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் - ஆளுநரிடம் பாராட்டுப்பெற்ற பிரபல யோகா மாஸ்டர் விபத்தில் பலி.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் படையாச்சி தெருவை சேர்ந்தவர் அரிஸ்டாட்டில். யோகா மாஸ்டராக உள்ள இவர் மாணவர்களுக்கு யோக பயிற்சியினை அளித்து வருகிறார்.

இந்நிலையில் அரிஸ்டாட்டிலும், அவரது யோகா மாணவன் வெற்றிவேலும் கீழக்கரையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது அவர்களின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.

இந்த விபத்தில் யோக மாஸ்டர் அரிஸ்டாட்டிலும், மாணவன் வெற்றிவேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் பலியான இருவரும், சமீபத்தில் தமிழக ஆளுநர் தேவிபட்டினம் வந்திருந்த போது அவர் முன்பு யோகா நிகழ்ச்சி செய்து பாராட்டை பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yoga master died accident in ramanathapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->