#தர்மபுரி || லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கக்கஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முருகேசன் (52). இவர் இன்று காலை தடங்கம் அருகே சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக திடீரென முருகேசன் மீது மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர், உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed in lorry collision


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->