நாங்குநேரி அருகே சோகம்.! மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மின்விசிறி சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பட்டர்புரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி திருமலை நம்பி (45). இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் மின்விசிறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே திருமலை நம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சமவெளிடத்திற்கு விரைந்து வந்த நாங்குநேரி போலீசார், உயிரிழந்த திருமலை நம்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed electrocution in tirunelveli


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->