நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற லாரி ஓட்டுநர்..! கழுத்தை நெறித்துக்கொன்ற தொழிலாளி..! மயிலாடுதுறையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் நண்பர் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் துணிசிறமேடு பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி மணிமாறன் (31). இவர் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது நண்பர் மேலசெங்கமேடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சசிகுமார்(28) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்பொழுது சசிகுமார், மணிமாறனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையறிந்த மணிமாறன் ஆத்திரமடைந்து சசிகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மணிமாறன் சசிகுமாரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker arrested for killing lorry driver in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->