தர்மபுரி || குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ஜீவா (45). இந்நிலையில் குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், மன வேதனை அடைந்த ஜீவா தற்கொலை செய்வதற்காக விஷ செடி ஒன்றின் இலைகளை அரைத்து தின்றுவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women suicide in dharmapuri


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->