தேனி || மகனை பள்ளியில் இருந்து நிறுத்திய விரக்தி - தாய் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்-தீபா தம்பதியினர். இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவன் சரியாக படிக்கவில்லை, அதனால் பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என்று கூறி மாணவனை பள்ளியில் இருந்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தாய் தீபா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சூழலில் செல்வம் வீட்டுக்கு வந்த போது மனைவி தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

செல்வத்தின் அழுகல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women sucide in theni for son stop studies


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->