நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண்.! உடலை பீரோவில் வைத்துவிட்டு தப்பிச் சென்ற கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நகைக்காக மூதாட்டியை கொலை செய்து உடலை பீரோவில் வைத்துவிட்டு பெண் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள நெரலூரு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் ரமேஷ். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாய் பார்வதம்மா (வயது80) குடும்பத்தினரை பார்ப்பதற்காக சிரா என்ற ஊரில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசித்து வந்த பாவல் கான் என்ற பெண், இவர்களது குடும்பத்திற்கு பழக்கமானார் என்பதால், சம்பவத்தன்று குழந்தைகளை பள்ளியில் விட்டு வர சென்ற ரமேசின் மனைவி ஜோதி, தான் திரும்பி வரும் வகையில் மூதாட்டியை பார்த்துக்கொள்ளுமாறு பாவல்கானிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய ஜோதி வீட்டில் மூதாட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பாவல் கானும் காணாமல் போயிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பாவல்கான் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டி அணிந்திருந்த 70 கிராம் அளவிலான தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய பாவல்கானை, கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman who killed an old woman for jewelry and left her body in the bureau


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->