மதுரையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்: விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயம்..!
Woman seriously injured after being hit by express train while trying to cross railway tracks in Madurai
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட ரெயிலானது இன்று மதியம் 03 மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் நாகர்கோவில் செல்வதற்காக புறப்பட்டது.

அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ராணி என்கிற பெண் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது ஐதராபாத்திலிருந்து வந்த விரைவு ரெயில் அவர் மீது மோதியது. இதில் அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அங்கிருந்த பயணிகள், ரெயில்வே போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர்மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
English Summary
Woman seriously injured after being hit by express train while trying to cross railway tracks in Madurai