கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல், தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட பெண் காவலர்..!!
Woman Police Attempt Suicide
கணவருடன் ஏற்பட்ட தகராற்றால் பெண் காவலர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை கணுவாய் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுதா. இவர் காரமடை காவல்நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறார். சுதாவிற்கும் அவரது கணவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சுதா மேட்டுபாளையம் டி.எஸ்.பி அலுவலகத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையே தகாராறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சுதா மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
சம்பவதன்று, சாணி பவுடரரை குடித்தது மயக்கமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Woman Police Attempt Suicide