மகள் திட்டியதால் தாய் எடுத்த விபரீத முடிவு.. சென்னை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மகள் திட்டியதால் மன உளைச்சலில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்தவர் இந்திரா. இவர் கடந்த வாரம் உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் சம்பவதன்று நடந்த பிரச்சனையில் அவரது மகள் அவரை திட்டியதாகவும் தெரிகிறது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman committed suicide in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->