#திருப்பூர் || கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை.!
Wife suicide due to family problem in Tiruppur
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கவிதா(வயது 30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவியிடையே நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு அனைவரும் உறங்கிய நிலையில் நேற்று காலை ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது, கவிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கவிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Wife suicide due to family problem in Tiruppur