காதலுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய இளம்பெண்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர் .

தெலுங்கானா மாநிலம் சிட்டிபெட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷியாமளா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி மரணமடைந்தார்.

நெஞ்சு வலி காரணமாக அவர் இறந்ததாக கூறிவந்த நிலையில் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.  இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது ஷியாமளா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் அவர் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ஷியாமளா சிவகுமார் என்பவரை காதலித்து வந்ததுள்ளார். ஆனால் பெரியவர்களின் கட்டாயத்தால் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவரை கொலை செய்வதற்காக  உணவில் எலிமருந்து கலந்து தந்துள்ளார். ஆனால் அவர் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு குணம் ஆகியுள்ளார்.  இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய  ஷியாமளா அவரை கோவிலுக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஷியாமளா அவரதுசிவா மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 மேலும், அவர் நெஞ்சுவலி காரணமாக இருந்ததாகவும் நாடகமாடி உள்ளார். இந்த வாக்குமூலத்தை அவர் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷியாமலா அவரது காதலன் சிவா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife kills his husband in Telungana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->