சேமித்து வைத்த பணத்தை திருடி சென்ற கணவன்.. அடித்து உதைத்த மனைவி..! - Seithipunal
Seithipunal


சேமித்து வைத்திருந்த பணத்தை திருடி சென்று மது அருந்திய கணவரை மனைவி அடித்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அனையபதியில் குடியிருந்து வருபவர் சசி. இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவதன்று சசி வீட்டு செலவிற்கு வைத்திருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து வந்து கண்ணன் அங்குள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தியுள்ளார்.

இதனை அறிந்த சசி டாஸ்மார்க் கடைக்கு சென்று அங்கிருந்த உருட்டுகட்டையால் கணவனை அடித்து உதைத்துள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.   அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணவர் தினமும் குடித்து விட்டு தகாத வார்த்தையால் சண்டையிட்டு வந்ததுள்ளார்.

குடும்ப செலவிற்கு வைத்திருந்த பணத்தையும் எடுத்து சென்று குடித்ததாக தெரிவித்தார். ஆனால், கண்ணன் தெரிவிக்கையில், நான் பத்துக்கு மேற்பட்ட ஆட்களை வைத்து கட்டிட தொழில் செய்து வருகிறேன் என்னிடம் இருக்கும் பணத்தை வாங்குவதற்கு மனைவி நாடகமாடுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife Attack his Husband


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->