உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்!!! இன்று 8000 கன அடியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு...!
Water inflow to Okenakkal increased to 8000 cubic feet today
கடந்த 2 நாட்களாக, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டங்கள், மைசூர்,சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம், சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம்,பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல கனமழை பெய்துள்ளது.
இதில், நேற்று மாலை 5000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 8000 கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Water inflow to Okenakkal increased to 8000 cubic feet today