விருத்தாசலம் | வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்த தமிழக அரசு பேருந்து! பயணிகளின் நிலை என்ன?! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசு பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையோர வாய்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விருத்தாசலம் அடுத்த நல்லூரில் இருந்து புறப்பட்டு, மே மாத்தூர் வழியாக விருத்தாச்சலம் நோக்கி 22 என்ற தடம் ஏன் கொண்ட அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது, கோமங்கலம் கிராமத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, அருகே உள்ள வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்தது.

இதில், பேருந்தில் பயணித்தவர்களில் 15க்கும் மேற்பட்டோருக்கு தலை, கை, கால்களில் காயமடைந்தனர்.

மேலும், காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viruthachalam GovtBus Accident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->