விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலையின் போர்மேன் அதிரடி கைது!
Virudhunagar firecrackers factory explosion person arrested
விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்தில் பத்து தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகவும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர் மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் திடீரென கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Virudhunagar firecrackers factory explosion person arrested