#BigBreaking | விநாயகர் சதுர்த்தி - கடும் நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற கிளை.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பாளர்கள் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விநாயகர் ஊர்வலம் சம்மந்தமான வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவு பிறந்துள்ளது.

மேலும், "அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்கக் கூடாது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பங்கேற்றவர்கள் எந்த விதமான போதை பொருள், மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது.

ஆபாச நடனம், ஆபாச பேச்சு இருக்க கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து, ஊர்வளத்தை நிறுத்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு" என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vinayagar sathurthi rules order chennai hc division


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->