#Breaking: விழுப்புரத்தில் மாயமான நபரை, செங்கல்பட்டில் கைது செய்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு டெல்லியில் நடைபெற்ற மத ரீதியிலான மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,173 ஆக இருந்தது. 11 பேர் உயிரிழந்து இருந்தனர். 

இந்த நிலையில், இன்று கரோனாவால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியான நபர்களின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து, மொத்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.. 

இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த நபருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். மறுசோதனையிலேயே இருவருக்கு மீண்டும் கரோனா உறுதியான நிலையில், இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. 

பாதிக்கப்பட்ட நபரை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இவர் குறித்த தகவல் கிடைக்காதது பெரும் பீதியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் படாலம் பகுதியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vilupuram corona virus positive youngster missed arrest by police now


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->