சொந்த தந்தையால் சீரழிக்கப்பட்ட மகள்.. 4 மாத கர்ப்பிணியாக விழிபிதுங்கும் சோகம்.. கண்ணீரில் தாயார்.!
Viluppuram Thiruvennainallur child girl sexual abuse by Father Police Arrest Culprit
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள கிராமத்தை சார்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதமாகவே அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக அவரின் தாயார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் இது குறித்து விசாரணை செய்துள்ளார். அதன்போது, சிறுமி தன்னை வாலிபரொருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் யார் என தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் தாயார், இது குறித்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் சிறுமி உண்மையை கூறவில்லை என்பதை உணர்ந்த காவல் துறையினர், சிறுமியிடம் உண்மையை கேட்டு விசாரணை செய்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் சிறுமி கண்ணீர் மல்க தனது தந்தையை கை காண்பித்துள்ளார். மேலும், தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்ணீருடன் காவல் துறையினரிடம் விவரித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram Thiruvennainallur child girl sexual abuse by Father Police Arrest Culprit