ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் பணமோசடி வழக்கில் கைது..! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றபிடிவு காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலைவாங்கி தருவதாக கூறி 3கோடி வரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து இடைக்கால நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலைவாங்கி தருவதாக 30லட்சம் மோசடி செய்த வழக்கில் அவர் கைது செய்யப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Nallathambi arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->