#வேலூர் || ஓட்டயைப்போட்டு ஆட்டையைப்போட்ட கள்ளக்குறிச்சி முருகன், பிரபாகரனை கைது செய்த தனிப்படை போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 24ம் தேதி காட்பாடி அருகே நகை அடகு கடை சுவற்றில் ஓட்டை போட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் ஒரு நகை அடகு கடையில், சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கடந்த 24ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், நகை அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை போலீசார் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellore serkadu robbery case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->