அனல் தெறிக்கும் பேச்சு - வேலூர் களத்தை தனதாக்கும் கதிர் ஆனந்த்!  - Seithipunal
Seithipunal


சும்மாவே பங்குனி மாதத்தில் வேலூர் அனல் பறக்கும். தற்போது தேர்தல் என்பதால் அனல் தெறிக்க அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகனின் மகன் தற்போதைய எம்பி கதிர் ஆனந்த் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்  நேர்காணலின்போதே "வாங்க முதல் வெற்றி வேட்பாளரே" என்று திமுக தலைவர் ஸ்டாலினால் அழைக்கப்பட்ட கதிர் ஆனந்த், முழுமூச்சுடன் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்த பாகர்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை எல்லாம் உடைக்கும் விதமாக முழு நம்பிக்கை உடன் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டு கதிர் ஆனந்த் தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கதிர் ஆனந்த் பேச்சு அனல் தெறித்தது. அதன் விவரம் பிவருமாறு, "இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தியை கொண்டுவர சிலர் முயற்சித்த போது, அதை கடுமையாக எதிர்த்து தமிழை தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்.

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் "அண்ணா உங்களின் தலைவர் மட்டுமல்ல எங்களின் தலைவர்" என்று முழங்கியவர் காயிதே மில்லத். அதனால்தான் பாடப் புத்தகத்தில் காயிதே மில்லத் வரலாறு இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை வைத்தேன். 

இந்த கோரிக்கைக்காக நான் நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் இந்த அவமானத்தை என்னை வெற்றி பெற வைத்த வேலூர் மக்களுக்காக தாங்கிக் கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது.

சிறுபான்மை இயக்கத்துக்கும், திமுகவுக்கும், எங்கள் தலைவர் குடும்பத்திற்கும் உள்ள உறவு என்பது தொப்புள்கொடி உறவு போன்றது. 

பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் எந்த ஒரு கோவிலுக்கும், எந்த சேதாரமும் ஏற்பட்டதில்லை. ஆனால், ஆன்மிகத்தையும், பக்தியையும் அரசியல் வியாபாரப் பொருளாக மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது.

தங்களது சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்வதற்கு அதிமுக, பாஜகவிற்கு ஒன்றுமில்லை. அதனால் தான் அவர்கள் ஆன்மீக உணர்வை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள்.

அரசியலுக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவர்களாக தமிழ்நாட்டு மக்கள்? அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் உரிமை சார்ந்தது என்றும், ஆன்மீகம் மனம் சார்ந்தது என்றும் தமிழக மக்களுக்கு தெரியும்.

மத்தியில் நம்முடைய பேச்சைக் கேட்கும் ஆட்சி அமையும் போது நம்முடைய திராவிட மாடல் மிழகத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் இந்திய மக்கள் அனைவருக்கும் சென்று அடையும்.

பாஜகவின் இந்த மக்கள் விரோத சட்டங்களில் அகற்ற உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. கள்ள கூட்டணி அமைத்து வாக்கு சேகரிக்க வரும் பாஜகவையும், அதிமுகவையும் வேலூர் மக்கள் நிராகரிப்பார்கள் என்பது உறுதியாகிவிட்டது" என்று கதிர் ஆனந்த் பேசி உள்ளார்.

வேலூர் தொகுதியை பொருத்தவரை மும்முனை போட்டி என்று சொல்லப்பட்டாலும், கதிர் ஆனந்தின் பிரச்சார யுக்தி அவருக்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாகவே தொகுதி நிலவரம் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore DMK Candidate Kathir Anand Election campaign 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->