தொடரும் சோகம்... வெள்ளியங்கிரி மலையில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு.!
Velliangiri goes youth dead issue
திருப்பூர் எஸ்.பி. காலனி சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 31). இவர் தனது நண்பர்களுடன் கலந்து பதினெட்டாம் தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சென்றார்.
தனது நண்பர்களுடன் மலையேறி சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது வீரக்குமார் எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏழாவது மலையிலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு வயிறு, கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள், வனத்துறை அதிகாரிகள், மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் வீரக்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Velliangiri goes youth dead issue