தமிழகத்தில் குறைந்த காய்கறி விலை.. பொதுமக்கள் நிம்மதி.! - Seithipunal
Seithipunal


கோயம்பேடு காய்கறி சந்தையில் நீண்ட நாட்கள் கழித்து காய்கறி விலை குறைந்துள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்வை சந்தித்தன.

இந்த நிலையில் இன்று விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.14ஆகவும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.30ல் இருந்து ரூ.20 ஆகவும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

மேலும், கத்தரிக்காய் ரூ.20க்கும், எலுமிச்சை ரூ.110க்கும் விற்பனையாகி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vegetables price decrease in koyambedu


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->