இனி மாவட்ட நீதிமன்றங்களிலும் காணொளி மூலம் விசாரணை - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குகளின் விசாரணை காணொலி வாயிலாகவும் நடத்தப்படுவதை கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கு முன்னதாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இதேபோல் மாவட்ட நீதிமன்றங்களிலும் நடைபெற இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி, வரும் 5-ந்தேதி முதல் மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி வாயிலாகவும் வழக்கு விசாரணைகளை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வசதியை மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vedio hearing start in tamilnadu district courts chennai high court order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->