இது தேர்தல் அல்ல போர் - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அம்பத்தூரில் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலைபாடு அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சாசனம் எனும் கோரிக்கை நூலை வெளியிட்டார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது:- "நாட்டில் வலதுசாரிகள் வலிமை பெற்று வருகின்றனர். இது நாட்டிற்கும் ஜனனாயகத்திற்கும் பேராபத்து. இவர்கள் மதத்தையும் மத உணர்வையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர். சாதிய வாக்கு வங்கி எனும் பல்வேறு அவதாரங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது இறுதி இலக்கை எட்டவில்லை. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என கூறினார். ஆனால், வேலையின்மைதான் அதிகரித்துள்ளது.

மோடி இதுவரை வளர்ச்சி பற்றி பேசியதே இல்லை. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக இவற்றை பற்றி பேசிதான் வாக்கு கேட்கிறார். தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேறிவிட்டது என்று மோடியால் பேச முடியுமா?. கடந்த மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை கார்பரேட் தான் வளர்ச்சி எட்டியுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

இப்பொழுது நடக்கக் கூடிய தேர்தல் காங்கிரஸ் - பிஜேபி ,பிஜேபி - திமுக இடையேயான தேர்தல் அல்ல, கருத்தியல் யுத்தம், மக்களுக்கும் - சங்கபரிவார்களுகும் இடையே நடக்கக் கூடிய போர். இதில், அவர்களை தோற்கடிப்போம்" என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vck leader thirumavalavan speech in chennai ambathur meeting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->