தலைக்கேறிய போதையில்.. தள்ளாடிய ஓட்டுநர்.. தர்மபுரியில் விசிகவினர் சென்ற பேருந்து விபத்து.!!!
Vck cadres Bus accident in Dharmapuri
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பத்தனஹள்ளி நாமத்தைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
இப்போது தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மேம்பாலத்தின் மீது அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி எதிரே சென்ற வாகனத்தின் மீதும் தடுப்பு சுமார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்காக பேருந்து இயக்கிய முகேஷ் என்பவர் மது போதையில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனால் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எடுத்து கும்மி c6 காவல் நிலைய போலீசார் முக்கிய செய்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Vck cadres Bus accident in Dharmapuri