100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்.!
100 hospitals Bomb threat
நாடு முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மருத்துவமனைகளில் நிபுணர்கள் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர், மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள மருத்துவமனையிலும் தீவிர சோதனை நடைபெற்று வருவதால் நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெறிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதைப் போல் நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
100 hospitals Bomb threat