நெடுஞ்சாலையில் பஸ்ஸும், லாரியும் மோதி கோர விபத்து.. 10 பேர் பரிதாப பலி.!!
10 people killed in road accident in Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலுள்ள மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் காயம் அடைந்தவர்கள் சாலையில் சிறிது நேரம் படுத்திருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த பொதுமக்களும் உதவினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் டயர் படித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
English Summary
10 people killed in road accident in Maharashtra